ஆப்நகரம்

50 ஆயிரத்தில் இருந்து கீழே இறங்கிய கொரோனா பாதிப்பு..! மீண்டெழும் தமிழகம்

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 9:04 pm
தமிழகத்தில் இன்று மேலும் 5,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil file pic


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 82891 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மேலும் 987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தொடர்ந்து கோவையில் இன்று 394 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் தற்போது 3631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,006 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமானோர்களின் மொத்த எண்ணிக்கை 435422 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8,231 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் தற்போது சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் இருப்பவர்களின் எண்ணிக்கை 47,918 ஆக குறைந்துள்ளது.

அடுத்த செய்தி