ஆப்நகரம்

கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து செல்கிறது...

கொரோனாவால் தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களின் தொகுப்பை உடனுக்குடன் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

Samayam Tamil 29 May 2020, 8:55 pm
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மட்டுமல்ல உயிரிழப்பும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தாலும் தற்போது ஒவ்வொரு நாளும் இரட்டை இலக்க எண்களில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகிவருகிறது.
Samayam Tamil corona tamilnadu live update


இந்நிலையில் கொரோனா குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகள், பாதிப்புகள், உயிரிழப்புகள், நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து லைவ் அப்டேட்ஸாக பார்க்கலாம்

LIVE UPDATE

* தமிழகம் முழுக்க இன்றைய நாளில் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8,776 என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் இன்று மேலும் 874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 141 பேர் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வந்த தமிழர்கள். ஆக மொத்தம் பாதிப்பு எண்ணிக்கையானது இன்றோடு, 20 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11,313 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11,313 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

* இன்று சென்னையில் அதிகபட்சமாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 13,362 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


* ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கர்ப்பிணி பெண் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளதால் மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறும் என அச்சத்தில் பொதுமக்கள்

* கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்

*டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார்.

*தன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி போலி மருத்துவர் திருதணிகாசலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

*தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு

*ரேஷன் கடைகளில் ஜுன் மாத உணவுப் பொருள்கள் பெற இன்று முதல் வீடுகளுக்கே சென்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.

*கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து துறை செயலர்கள், சென்னை மாநகராட்சி ஆணயர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

*தமிழ்நாட்டில் நேற்று 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,327ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 10,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

*நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரையிலான உயிரிழப்பு 145ஆக உயர்ந்துள்ளது.

*சென்னையில் நேற்று 559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை அங்கு 12 ஆயிரத்து 762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 933பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி