ஆப்நகரம்

தமிழகத்தில் இன்றுடன் கொரோனாவால் 12,236 பேர் பலி..! இன்றைய முழு நிலவரம்

தமிழத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 11:29 pm
தமிழகத்தில் இன்றைய (12-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,27,614 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 228169 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 222039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4053 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53259 ஆக அதிகரித்துள்ளது. 51926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 661 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. இதுவரை இங்கு 2259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருத்தர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4660 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 19 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்துக்குள் புகுந்து தமிழ் எழுத்துகள் அழிப்பு: சீமான் கண்டனம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,287 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,46,38,489 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 827 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,08,571 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை /12,236 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி