ஆப்நகரம்

10 நிமிஷம்தான் அனுமதி... இறந்த தாய்க்கு கவச உடையுடன் வந்து அஞ்சலி செய்த மகன்...

திருப்பத்தூர் அருகே இறந்த தாய்க்கு அஞ்சலி செலுத்த கவச உடையுடன் வந்த கொரோனா நோயாளி

Samayam Tamil 12 Sep 2020, 5:45 pm
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய தாய் இறந்துவிட்டதாக முருகேசனுக்கு தகவல் வந்துள்ளது.
Samayam Tamil corona patient mother dies


ஆனால், அரசின் விதிமுறைகளின் படி, கொரோனா சிகிச்சை பெற்று வரும் ஒருவர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். முருகேசனுக்கும் தொடக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தாயின் முகத்தை கடைசியாக பார்க்க அவர் கெஞ்சி அனுமதி பெற்றுள்ளார். ஆனாலும், 10 நிமிஷம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் கூறினர்.

அதன்படி, முருகேசனுக்கு உடல் முழுவதும் கவச உடையை அணிவித்து ஆம்புலனில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது தாயின் உடலுக்கு முன்பாக சிறிது நிமிடம் அஞ்சலி செலுத்தினார். உடல் முழுவதும் கவச உடையை அவர் அணிந்திருந்தாலும், முருகேசனின் உள்குமுறல் அங்கிருந்தவர்களுக்கு வெளிப்படையாக காட்டியது.

மதுரை மாணவியின் தற்கொலைக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

அந்த நிகழ்வு சுகாதார ஊழியர்களையம் கண்கலங்க செய்தது. கொரோனாவால் பல சோக நிகழ்வுகள் நடந்திருந்தாலும், பெற்ற தாய்க்கு கடைசி மரியாதையை இடுகாட்டு வரையில் செய்ய முடியாத சம்பவம் சோகத்தின் உச்சம்.

அடுத்த செய்தி