ஆப்நகரம்

பிப்ரவரி 05: தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Feb 2021, 9:56 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பேருக்கு 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,40,849 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil file pic


மாநிலத்தில் தற்போது 4,467 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 232013 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 226325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4113 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54688 ஆக அதிகரித்துள்ளது. 53557 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 673 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பில்லை. இதுவரை இங்கு 2269 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2242 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 21 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

எழுவர் விடுதலையில் அரசு உறுதி: ஓபிஎஸ்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,487 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,59,69,220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 506 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,24,024 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,379 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி