ஆப்நகரம்

வீடு தேடிவரும் 1000ரூ நிவாரணம்: போதுமானது தானா?

நான்கு மாவட்டங்களில் இன்று முதல் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொரோனா நிவராணத் தொகை வழங்கப்படுகிறது.

Samayam Tamil 22 Jun 2020, 10:24 am
கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பறிபோனதில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து அவர்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Samayam Tamil corona relief fund distribution started today for four districts people
வீடு தேடிவரும் 1000ரூ நிவாரணம்: போதுமானது தானா?


1000 ரூபாய் போதாது!

கொரோனா பொது முடக்கத்திலிருந்து சமாளிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது. அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை பெரும் பாதிப்பிலிருந்து மீண்டுவர போதுமானதாக இல்லை என தொடர்ந்து குரல்கள் எழுந்துவருகின்றன.

மீண்டும் பொது முடக்கம்!

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜுன் 19ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் இந்த பொது முடக்கம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டியடித்த கூட்டம்!

இந்நிலையில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஏற்கெனவே இது போன்று நிவாரணம் கொடுத்தபோது மக்கள் ரேஷன் கடைகளில் முண்டியடித்தனர். அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக வீடுகளுக்கே நேரடியாக சென்று அந்தந்தப் பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் பணம் வழங்குகின்றனர்.

வீடு தேடிவரும் பணம்!

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாளுக்கு 200 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. 26ஆம் தேதி வரை 5 நாட்கள் வீடுகளுக்கே சென்று நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதில் விடுபட்டவர்களுக்கு வருகிற 29 மற்றும் 30ஆம் தேதி ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி