ஆப்நகரம்

Corona Medicine: கோவிஷீல்டு தடுப்பூசி இன்று முதல் தமிழகத்தில் தொடக்கம்

இதன் ஒரு கட்டமாக சுமார் 300 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பயன்படுத்தப்படுவர்.

Samayam Tamil 28 Aug 2020, 8:42 am
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி இன்று முதல் தமிழகத்தில் சோதனை செய்யப்பட உள்ளன.
Samayam Tamil covishield


உலகம் முழுக்க இதுவரை 2.46 கோடி மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுக்க ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் அதிகம் பேரால் கவனிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி வெற்றிகரமாக அடுத்தடுத்த படிகளை எட்டி வருகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் இணைந்து தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மூன்றாம் கட்ட மனித சோதனையில் உள்ளது. இந்த சோதனையை இந்தியாவில் நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் சோதனை தொடங்குகிறது.

அந்த வகையில், இன்று தமிழகத்தில் இரண்டு மருத்துவமனைகளில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடங்கப்பட உள்ளது. சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை... காரணமாகப்போகும் கோயம்பேடு?

இதன் ஒரு கட்டமாக சுமார் 300 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பயன்படுத்தப்படுவர். இந்த சோதனையின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். இந்தப் பொறுப்பை மெட்ராச் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனிப்பார்கள் என்றும் மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கிடைக்காதா என்ற உலக மக்களின் ஏக்கத்தை இந்த கோவிஷீல்டாவது போக்குமா என்ற எண்ணத்தை இந்த ஆராய்ச்சி முயற்சிகள் அதிகரித்துள்ளன.

அடுத்த செய்தி