ஆப்நகரம்

கொரோனா: சீனாவில் 30,000 பேருக்குமேல் வைரஸ் பாதிப்பு... உயிரிழப்பு 636ஆக உயர்வு

ஜனவரி 15 மற்றும் அதற்குப்பிறகு சீனாவில் இருந்த இந்தியர்கள் யாரும் எந்த வழியாகவும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Feb 2020, 9:09 am
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் அச்சுறுத்தலையும், பரவலான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றையும், உயிரிழப்பையும் தடுக்க அரசுத்தரப்பிலும், சர்வதேச சுகாதார நிறுவனங்கள் தரப்பில், ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் மூலமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil china toll check


எனினும், நாளுக்கு நாள் உயிர்ழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அண்மைத் தரவின்படி, இதுவரை சீனாவில் 636 பேர் இந்த கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதில் 73 பேர் குழந்தைகள் என்பது கூடுதல் கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.

பிப்ரவரி 7ஆம் தேதி (இன்று) கணக்கின்படி இதுவரை 30,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 15 மற்றும் அதற்குப்பிறகு சீனாவில் இருந்த இந்தியர்கள் யாரும் எந்த வழியாகவும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தோ-நேபாளம், இந்தோ-பூடான், இந்தோ - வங்கதேசம் மற்றும் இந்தோ-மியான்மர் எல்லை அதிகாரிகள் மூலம் இந்த நுழைவு விவகாரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி