ஆப்நகரம்

சென்னை: கொரோனா அச்சத்தில், விமான நிலையத்தில் அரசு செய்ததை பாருங்க!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா சோதனைகளைத் தானியங்கி இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

Samayam Tamil 21 Feb 2020, 8:44 am
உலகையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தவிரப் பிற நாடுகளில் கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 2பேர் கொரோனா தொற்று காரணமாகப் பாதிப்படைந்திருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
Samayam Tamil ChennaiAirport_BaggageChecking_Twitter.


சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபரைத் தொடர்ந்து கேரள அரசு கண்காணித்து வருகிறது. இதற்கிடையே அரசு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சீனா உள்பட கொரோனா பாதிப்பிற்கு ஆளான நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகள் உதவ சீனா கோரிக்கை

இந்த புதிய ஸ்மார்ட் கருவியால் மனிதர்கள் தங்கள் கைகளைக் கொண்டு சோதனை செய்து வந்த நிலை மாறும். சோதனை செய்யும் கருவியில் சேனிட்டைஸர்கள் உள்ளன. சோதனைக்குப்பின் கருவிகள் தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும்.

இதன் மூலம் பயணிகளின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 30 பேரை வீட்டில் பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மீனவரை இலங்கை சுட்ட கதை, மதுரை மருத்துவமனைக்கு எப்படி சென்றார்கள்!

சென்னை விமான நிலையத்தில் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் கடந்த 28 நாட்களில் நடந்த சோதனையில் 611 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி