ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மேலும் 9,344 பேருக்கு கொரோனா..! இன்று ஒரே நாளில் 39 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

Samayam Tamil 17 Apr 2021, 8:34 pm
தமிழகத்தில் மேலும் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,80,728 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 5,263 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,02,022 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 17; தனியார் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2884 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 280184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 4386 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று 652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 61500 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 705 பேர் பலியாகியுள்ளனர்.

வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு முடிந்தது..!

செங்கல்பட்டில் இன்று 807 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65424 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58302 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 859 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,07,39,160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,00,804 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 65,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி