ஆப்நகரம்

கொரோனா புயல்: தமிழகத்தில் இன்றைய மாவட்ட நிலவரம்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு உள்ளிட்ட நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 8:02 pm
தமிழகத்தின் கொரோனா நிலவரத்தை தினந்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உங்களது மாவட்டங்களில் கொரோனா எப்படி இருக்கிறது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பேருக்கு 1,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 483 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 212504 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 204328 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.3822 ர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47676 ஆக அதிகரித்துள்ளது. 46379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 599 பேர் பலியாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதுவரை 2233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருத்தர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.


கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க வேண்டும் - சத்குரு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,377 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,13,19,435 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,904 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,47,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,622ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி