ஆப்நகரம்

மார்ச் 01: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 Mar 2021, 10:18 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,52,016 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 36 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona


மாநிலத்தில் தற்போது 4,009 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 234191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 229783 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4155 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55799 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 683 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52819 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 51702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 782 பேர் பலியாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2284 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2260 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேர்தலில் தனித்து போட்டியிடும் தேமுதிக; சுதிஷ் ஹின்ட்!

அதுபோல, அரியலூரில் இன்று இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 4741 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49,930 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,72,13,597 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 482 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,35,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,501 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி