ஆப்நகரம்

சென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்சி

ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பபட்டுள்ள நிலையில் கொரோனா தாக்கம், பொது முடக்கம் குறித்த முக்கிய தகவல்களை லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்.

Samayam Tamil 3 Jun 2020, 7:37 pm
கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு தமிழ்நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுக்க ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தளர்வுகள் எவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன, எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது, கொரோனா பாதிப்பு எந்த அளவில் உள்ளது, இறப்பு விகிதம் என்ன என்பதை உடனுக்குடன் இந்த இணைப்பில் காணலாம்.
Samayam Tamil tamil nadu coronavirus updates


LIVE UPDATE

*
தமிழகத்தில் இன்று மேலும், 1286 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.

* அதிகபட்சமாக சென்னையில் இன்று 1012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 11,345 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

*10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

*சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,060 ஆக அதிகரித்துள்ளது.

*உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு மையம் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

*செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டநிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,360ஆக அதிகரித்துள்ளது.

*ஜுன் 8ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

*தீயணைப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று நலமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 536. எனவே இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது.

*அதிகபட்சமாக 13 பேர் நேற்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

* சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை சென்னையில் 16,585 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி