ஆப்நகரம்

பாரபட்சம் பார்க்காமல் அடித்து தாக்கும் கொரோனா வைரஸ்..!

தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jul 2020, 10:41 pm
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நான்காயிரத்தை கடந்து வந்த நிலையில் மூன்று தினங்களாக அதில் சற்று இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில் பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
Samayam Tamil coronavirus cases


தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

*
தமிழகத்தில் இன்று மேலும் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக இன்று அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,309 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15,29,092 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

* சென்னையின் விவரம் படி, இன்று மேலும் 1,205 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது.

* இன்று அதிகபட்சமாக 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமானோர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 1829 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தபட்டும் 46,105 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் இரு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

*விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய திருதணிகாச்சலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

*ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தேனி - பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.

*நத்தம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 20 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

*தமிழகத்தில் நேற்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73,728ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1765 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி