ஆப்நகரம்

கொரோனா: இந்த ஊரடங்கில் நிலைமை கட்டுக்குள் வருமா?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு, பரவல், பலி, தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தளர்வு, குறித்த முக்கிய தகவல்களை லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்.

Samayam Tamil 19 Jun 2020, 7:47 pm
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம் எவ்வாறு பின்பற்றப்படுகிறது, பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.
Samayam Tamil coronavirus cases


LIVE UPDATE

*
தமிழகத்தில் இன்று மேலும் 2115 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் 40 பேர் என்ற நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54449ஆக உயர்ந்துள்ளது.

* இன்று சென்னையில் அதிகபட்சமாக 1322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.

* இன்று 1630 பேர் குணமாகியுள்ள நிலையில் மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30271 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 41 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 23509 பேர் உள்ளனர்.

* புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் கழிவறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*உயர் கல்வித்துறை அமைச்சரின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

*கடலூர் மாவட்டத்தில் 2 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என்ற தகவல் தவறானது என சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

*சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை மண்டலம் வாரியாக வெளியிட்டுள்ளது மாநகராட்சி. ராயபுரம் 5,828, தண்டையார் பேட்டை 4,743, தேனாம்பேட்டை 4504.



*உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

*சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

*தமிழகத்தில் நேற்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 52,334 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,070ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 625 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி