ஆப்நகரம்

கொரோனா: முதல்வருடன் மத்திய குழு நாளை முக்கிய ஆலோசனை

கொரானா பணிகள் குறித்து ஆராய தமிழகம் வந்துள்ள மத்திய குழு நாளை முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்

Samayam Tamil 9 Jul 2020, 9:24 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,26,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


இதனிடையே, மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவானது சென்னை வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான இந்த குழுவானது, கொரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

சென்னைக்கு முக்கிய அறிவிப்பு: 3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு!

அந்த வகையில், கொரானா பணிகள் குறித்து ஆராய தமிழகம் வந்துள்ள மத்திய குழு நாளை முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் இக்குழுவினர் வழங்குவார்கள் என தெரிகிறது.

அடுத்த செய்தி