ஆப்நகரம்

ஐநூறை கடந்தது கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை: வேற எங்கே? - இங்கே தான்!!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை 500 -ஐ கடந்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 1:46 am
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி(ஏப்ரல் 25) கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 1,821 ஆக இருந்தது. இந்த நிலையில் சென்னை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona chennai


இதில் அதிகபட்சமாக சென்னை மாநகர பகுதிகளில் மட்டும் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இங்கு மட்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர்: அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 960 -திலிருந்து 1,020 ஆக அதிகரித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.

கொரோனா: தமிழகத்திலும் விரைவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை?!

அதிகபட்சமாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து இன்று 13 பேர் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தற்போதைய நிலவரப்படி மொத்தம் 885 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மொத்தம் கொரோனா அறிகுறிகள் உள்ள 29, 056 பேர் வீடுகளிலும், 26 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

26,917 பேர்: இதேபோன்று, இந்திய அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 26,496 இல் இருந்து 26, 917 ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை ஆறாயிரத்தை நெருங்குகிறது.

அதாவது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914 ஆக உள்ளது.

அடுத்த செய்தி