ஆப்நகரம்

ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு... டிஜ்சார்ஜ் 58 ஆயிரம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அதேசமயம், சிகிச்சைக்கு பிறகு இதுநாள்வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மிகுந்த நம்பிக்கையளிக்கும் விஷயமாக உள்ளது.

Samayam Tamil 4 Jul 2020, 9:38 am
கொரோனா வைரசின் தாக்கம், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா தாக்கம் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டுள்ளது.
Samayam Tamil corona tamilnadu


இன்றைய நிலவரப்படி (ஜூலை 3), தமிழகத்தில் மொத்தம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதாவது, மொத்தம் 1,02,721 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 64, 689 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 4,343 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 3,423 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை!!

தமிழகத்தில் இன்று (ஜூலை 3) ஒரே நாளில் புதிதாக 4, 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 2,082 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 64,689 அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 64 பேர் பலியானதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் காரணமாக இதுவரை மொத்தம் 58,378 பேர் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி