ஆப்நகரம்

கொரோனா: தொடரும் பாதிப்புக்கு காரணம் மக்களா, அரசா?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு, பரவல், பலி, தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தளர்வு, குறித்த முக்கிய தகவல்களை லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்.

Samayam Tamil 12 Jun 2020, 7:07 pm
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1500ஐக் கடந்துள்ளது. பொது முடக்கம் மிக கறாராக கடைபிடிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவித்துள்ள இந்த நேரத்தில் மிக வேகமாக பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது அதிகளவின் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளிக்க உள்ளது.
Samayam Tamil Coronavirus Cases


தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு எவ்வாறு உள்ளது, மருத்துவமனை நிலவரங்கள், பலி விவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எவ்வாறு மேற்கொள்கிறது, மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்வு.

* சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,479 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 28,924 ஆக அதிகரிப்பு.

* தமிழகத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 367 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 1342 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

*கொரோனா தடுப்பு பணிகாக சென்னைக்கு பிற மாவட்டங்களிலிருந்து 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

*ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. 9 மண்டலங்களில் பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது.



*சென்னையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையில் இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*சுகாதாரத் துறைச் செயலாளராக பதவி வகித்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*கொரோனா பாதிப்பு உறுதியானால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

*செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற செய்தியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

சென்னைக்கு மீண்டும் ஊரடங்கு இல்லை: முதல்வர் உறுதி!

*திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

*தமிழ்நாட்டில் நேற்று 1875 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்தது.

*சென்னையில் அதிகபட்சமாக 1406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,398 ஆக உயர்ந்தது.

*தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 1372 பேர் நலமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 23 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி