ஆப்நகரம்

தமிழகத்தில் இங்கிலாந்து கொரோனா தொற்று விவரம்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 27 Dec 2020, 6:52 pm
தமிழகத்தில் இன்றைய (27-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,006 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,14,170 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 13 பேருக்கு புதிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 8,947 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 224386ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 217539பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3993 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51980 ஆக அதிகரித்துள்ளது. 50478 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 645 பேர் பலியாகியுள்ளனர்.



பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 2255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2232 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4629 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டிசம்பர் 31இல் கட்சி அறிவிப்பு இல்லை: ரஜினியை நகரவிடாமல் செய்த மூன்று நிபந்தனைகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,919 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,36,22,580 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,091 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,93,154ஆக அதிகரித்துள்ளது. இன்று 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,069 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி