ஆப்நகரம்

கொரோனா: மருத்துவர்கள் அச்சப்பட தேவையில்லை - முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 21 Apr 2020, 6:24 pm
சென்னை: கொரோனா இடர்பாடுகளில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை இறைவனுக்கு நிகராக தான் கருதுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


கொரோன நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களை உரிய பாதுகாப்பு நடைமுறைகளாஇ கடைப்பிடித்து அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவர்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டுள்ளார். மேலும், தன்னலம் கருதாமல் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க்ம் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலவச சிலிண்டர்: பயனாளிகளுக்கு ஐ.ஓ.சி. முக்கிய அறிவிப்பு

இதுபோன்ற சம்பவங்கல் இனி நடைபெறாமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள முதல்வர், மருத்துவர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை


மனித குலத்துக்கு சவாலாக இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது குடும்பத்தை மறந்து தன்னலம் பாராமல் பணியாற்றி வருகின்றனர். உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை இறைவனுக்கு நிகராக தான் கருதுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி