ஆப்நகரம்

கொரோனாவுக்கு டஃப்; டாஸ்மாக் வாசலை பாராக மாற்றிய ‘குடி’மகன்கள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் உலக வல்லுநர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடையின் வாசலிலேயே சரக்கடிப்பவர்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர்

Samayam Tamil 17 Mar 2020, 11:50 pm
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதனுடைய வாசலையே ‘குடி’மகன்கள் பாராக மாற்றியுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, டாஸ்மாக் மதுபான கடைகளின் பார்கள் உள்ளிட்ட அனைத்து பார்களும் வரும் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்கள் வழக்கம்போல் இயங்குமா? - டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கையால் குழப்பம்!!

அதேபோல், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தரமான முகக்கவசங்களை அளிக்கவும், அனைத்து சில்லறை விற்பனை கடைகளுக்கும் கிருமிநாசினி திரவ பாட்டில்களை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை வேண்டும். டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக நிர்வகித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்க வரும் ‘குடி’மகன்கள் பார்கள் இல்லாததால், டாஸ்மாக் கடையின் வாசலையே பாராக மாற்றியுள்ளனர். கடையில் சரக்கை வாங்கி வாசலில் வைத்து குடித்து விட்டு அங்கேயே தூக்கி எறிந்து விட்டு செல்கின்றனர். இதனால், டாஸ்மாக் கடைகள் வழக்கத்தை விட கூடுதல் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருக்கும் அதனுடைய நிறுவனமான டாஸ்மாக் கடைகளிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு அரசு தீவிரத்தன்மையுடன் செயல்படும் என்பது கேள்விக்குள்ளாகும் விஷயம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி