ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாவட்ட வாரியாக தெரிந்துகொள்வோம்

Samayam Tamil 24 Jul 2021, 9:03 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,46,689 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 24,025 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


சென்னையில் மட்டும் இன்று 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,37,013 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 5,27,102 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,307 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,28,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,23,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,154 பேர் பலியாகியுள்ளனர்.


செங்கல்பட்டில் இன்று 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 161225 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 157610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2392
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,40,897 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,55,22,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

யானை வேண்டும்; கிடைக்கும் வரை போராடுவோம்: அண்ணாமலை தகவல்!

மாநிலத்தில் இன்று 2,583 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,88,775 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,889 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி