ஆப்நகரம்

வேலூரில் ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா; இப்படித்தான் பரவியது!!

வேலூரில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்ற தனியார் கிளினிக், லேப் மூடப்பட்டன.

Samayam Tamil 17 Apr 2020, 1:38 pm
வேலூர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபப்பட்ட பின்னர், அவர் சென்ற தனியார் கிளினிக், லேப் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன.
Samayam Tamil வேலூர் கிளினிக்


இதுகுறித்து வேலூர் மாவட்டக் கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில், ''கோனவட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் அவரது வீட்டுக்கு அருகே இருந்த மதானி கிளினிக்கிற்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது.

இதற்குப் பின்னரும் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து அருகில் இருக்கும் இந்திரா நர்சிங் ஹோம் சென்றார். அங்கு அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு தனியார் லேப்பான அன்னை டயக்னாஸ்டிக் லேபுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னைக்கு வந்தது 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள்!!

இந்த பெண்ணின் கணவர், மகள், நான்கு வயது பேத்தி ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களும் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்திரா நர்சிங் ஹோம், மதானி கிளினிக், தனியார் டயக்னாஸ்டிக் லேப் ஆகியவற்றுக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்'' என்றார்.

கொரோனா ரெட் ஸோன்: தமிழ்நாடுதான் நம்பர் 1

சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ''முக்கியமாக இந்த கிளினிக், லேப் சீல் வைக்கப்பட்டதற்கு காரணமே மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். கிருமி நாசினியும் கிளினிக்குகளில் தெளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

காலில் செருப்பு இல்லாமல் 170 கி.மீ.; 7 வயது தமிழ் சிறுவனின் துயரம்!!

இங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண்ணுக்கு எங்கிருந்து கொரோனா தொற்றியது என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. அவரது கணவர் வேலூர் நகரில் மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார். இந்தக் குடும்பத்துடன் யாராவது சமீபத்தில் தொடர்பில் இருந்தார்களா என்பதை அறிய மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

யாருக்காவது இருமல், சளி, தும்மல், காய்ச்சல் இருந்தால் சிஎம்சி மருத்துவமனையை நாடுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி