ஆப்நகரம்

கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத நிலை வராது: மருத்துவ நிபுணர் குழு

ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்

Samayam Tamil 14 May 2020, 8:14 pm
கொரோனா சமூக பரவலை கட்டுக்குல் கொண்டு வர மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் வருகிற 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனினும், நான்காம் கட்ட முழு முடக்கம் மே 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், அது முந்தைய முடக்கங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகளைக்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு, முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிபுணர் குழுவினர், ஊரடங்கை 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

வாகன வரி செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு எப்போ வரை தரியுமா?

ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர், அதிகமாக பரிசோதனை செய்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவினர், கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது என தெரிவித்ததுடன், கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி