ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 21 பேர் பலி..! 5வது பொது முடக்கத்திலும் குறையாத பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 300 கடந்துள்ள நிலையில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 9 Jun 2020, 8:04 pm
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களோடு சேர்த்து புதிதாக 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil corona deaths in chennai today


இன்று சென்னையில் அதிகட்சமாக 1242 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிசகத்தில் இதுவரை குணமாகியவர்களின் எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 16,279 பேர் உள்ளனர். அதுபோல தமிழகத்தில் இதுவரை 21,666 ஆண்கள், 13,231 பெண்கள், 17 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி