ஆப்நகரம்

கொரோனா ஊரடங்கால் மன அழுத்தமா? அப்போ இது உங்களுக்கான செய்தி!

தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் மனநல ஆலோசனைகள் வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2020, 4:27 pm
சென்னை: கொரோனா வைரஸ் ஊரடங்கால் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் ஆலோசனைகள் பெறுவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000த்தை தாண்டியுள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பல விதமான் மன உளைச்சலுக்கும், மன அழுத்ததிற்கும் ஆளாகி வருகின்றனர். இதனால், வீட்டிற்குள் நடைபெறும் வன்முறைகள் அதிகமாகி கொண்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், மது கிடைக்காத விரக்தியிலும், கொரோனா அச்சம் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

திருச்சி: ஒரே நாளில் வீடு திரும்பிய 32 பேர்!

அதேசமயம், கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் அதனை போக்கும் வகையில், +91-11-23978046, 1075, 044-29510500 உள்ளிட்ட உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதாலும், சமூக இடைவெளி காரணமாக ஒருவருக்கொருவர் விலகி இருப்பதாலும் பல்வேறு மன உளைச்சல், மன அழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர் என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மனநல ஆலோசனைகள்


அதன்படி, மனநல ஆலோசனைகள் பெற விரும்புவோர் காலை 10மணி முதல் 12 மணி வரை - 8778619480 என்ற எண்ணிற்கும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை 9941142327 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாக ஆலோசனை பெற விரும்புவோர் splcoun@tnmgrmu.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி