ஆப்நகரம்

நலம்பெற்று வருகிறார் நல்லகண்ணு: கொரோனா தொற்று இல்லை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றுஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 21 Aug 2020, 8:21 pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil மருத்துவமனையில் நல்லகண்ணு
மருத்துவமனையில் நல்லகண்ணு


நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், 95 வயதான நல்லகண்ணுவுக்கு திடீரென உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த தோழர் நல்லகண்ணுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது. அதேசமயம், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை என்றும், அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு திமுக சாயம் பூசுவாரா மாரிதாஸ்? அரசியல் அரங்கில் வலம் வரும் விநாயகர்!

இந்த நிலையில், “நல்லகண்ணு நலமடைந்து வருகிறார். கொரானா பாதிப்பில்லை என்று கூறிவிட்டார்கள். காய்ச்சல் மட்டும் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. இந்த வயதிலும் உடல்நலத்துடன் இருப்பதை மருத்துவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். விரைவில் நலம் பெற்று அவர் வீடு திரும்புவார்” என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி