ஆப்நகரம்

புதுச்சேரியில் சர்வாதிகாரம், கொரோனாவால் சிறை செல்லப் போவது யார்?

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி மக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 2:16 pm
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரும் மக்கள் காவல்துறையினரிடம் சண்டைபோட்டு, தகராற்றில் ஈடுபடுகின்றனர்.
Samayam Tamil புதுச்சேரி கடல்
புதுச்சேரி கடல்


இதனால் புதுச்சேரிய் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது. புதுச்சேரி அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள போதும், புதுச்சேரியில் நிலவும் இந்த அசாத்திய போக்கால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பீதி அடைந்துள்ளது. இதற்கிடையே மக்களின் இந்த வீதிமீற்ல்களை கண்டிக்கும் வகையில் முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவில்லை.

டிரேஸ், டெஸ்ட், டிரிட்மெண்ட் கொரோனாவை ஒழிக்கும் தாரக மந்திரம்!

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பீதியை கிளப்பியுள்ள போதும், புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் மாநிலத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் துணை ராணவப் படையின் உதவியை அரசு கோரும்.

அதேபோல் வரும் 25(நாளை) ஆம் தேதி முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மருந்தகங்களைத் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த தடை உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அடுத்த செய்தி