ஆப்நகரம்

தமிழ்நாட்டில் 6,618 புது கேஸ், 22 பேர் பரிதாப பலி..! வலுக்கும் கொரோனா அபாயம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளளது.

Samayam Tamil 11 Apr 2021, 9:41 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


தமிழகத்தில் தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 2124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 265126 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 245041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4324 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63197 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58447 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 699 பேர் பலியாகியுள்ளனர்.

ஏப்ரல்15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு...

செங்கல்பட்டில் இன்று 631 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60792 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 844 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 87,767 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,01,89,603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 2,314 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி