ஆப்நகரம்

செப்டம்பர் 18: தமிழக கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2021, 9:32 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,43,683 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil representative image


சென்னையில் மட்டும் இன்று 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 547478 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 537090 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8447 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 240023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 235509 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2313
பேர் பலியாகியுள்ளனர்.


செங்கல்பட்டில் இன்று 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 167406 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 163707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2458
பேர் பலியாகியுள்ளனர்.

மாணவியின் ஆடை குறித்து கேள்வி, கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்ஸ்..! என்னாச்சு?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,55,648 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,42,42,357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,581 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,91,480 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,310 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி