ஆப்நகரம்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 21 Mar 2020, 6:15 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளதாக சுகாதராத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஏற்கனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா: தற்போதையை நிலவரம் என்ன?

இதனிடையே, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு வலியுறுத்தியுள்ளார். கொரோனா மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கான எல்லைகள் மூடப்படுவதாகவும், வருகிற 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளதாக சுகாதராத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் இருவர் தாய்லாந்து நாட்டினர் எனவும், ஒருவர் நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்தவர் என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி