ஆப்நகரம்

தமிழகத்தில் 1,062 பேருக்கு கொரோனா..! மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 21 Dec 2020, 6:59 pm
தமிழகத்தில் இன்றைய (21-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,071 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,07,962 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 9,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 306 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 222580 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 215603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3960 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவையில் இன்று 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51368 ஆக அதிகரித்துள்ளது. 49740 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 637 பேர் பலியாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2253 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 4 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மின்வாரியம் தனியார் மயம் திட்டம் ரத்து: வேல்முருகனின் ஆர்ப்பாட்டமும் ரத்து

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,630 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,32,23,313 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,157 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,86,472 ஆக அதிகரித்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,995 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி