ஆப்நகரம்

கொரோனா: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

கேரள எல்லையான வாளையார் பகுதியின் வழியாக தமிழகத்திற்குள் வரும் கனரக வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றது.

Samayam Tamil 21 Mar 2020, 1:50 pm
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து கோவையை அடுத்த தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் இன்று காலை முதல் வாகன சோதனையானது தீவிரப்படுத்தபட்டுள்ளது.
Samayam Tamil கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன


தமிழகத்திற்குள் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை மீண்டும் வரும் 31ம் தேதி வரை தமிழகம் வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பபட்டு வருகின்றன.

இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் கோவை எஸ்.பி.சுமித்சரண் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாளையார் சோதனைசாவடியில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், '' அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில் நடைபெறுகின்றது எனவும், கேரள எல்லையோராத்தில் மருத்துவ குழுக்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றது எனவும் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகதிற்கு அத்தியாவசிய பொருட்களுடன் வரக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா எச்சரிக்கை: இந்த ஊராட்சித் தலைவர் கெத்துங்க...

பொது மக்கள், தனியார் வாகனம், பேருந்துகள் , சுற்றுலா வாகனம், இரு சக்கர, மூன்று சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றோம். இந்த பணி வரும் 31 ம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி இருந்த 5 பேரில் 3 பேருக்கு நெகட்டிங் என ரிசல்ட் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

நாளை காலை முதல் மாலை வரை வீட்டில் இருக்க பிரதமர் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மாநில எல்லைகளில் நடந்து செல்பவர்களையும் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.

அடுத்த செய்தி