ஆப்நகரம்

நீட்டிக்கப்படும் ஊரடங்கு: என்னென்ன இயங்க வாய்ப்புகள் உள்ளன?

நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 16 May 2020, 3:40 pm
மே 17க்குப் பிறகு இந்தியாவில் ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் பொது போக்குவரத்து, உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை சில மாற்றங்களுடன் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
Samayam Tamil நீட்டிக்கப்படும் ஊரடங்கு


ஆட்டோ, கார் ஆகியவற்றில் இருவர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், உள் நாட்டு விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை மாநிலங்கள் விருப்பத்துகிணங்க செயல்படுத்தக்கூடும். மெட்ரோ ரயில் சேவைகள் சிவப்பு மண்டலங்களில் செயல்படுத்தப்படாது என தெரிகிறது.

மே 11ஆம் தேதி பிரதமர் - முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்படி இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இது குறித்த முழுவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே ஏப்ரல் 15, மே 4 ஆகிய தேதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது போல் இது மூன்றாவது நீட்டிப்பு ஆகும்.

தொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 14 பேர் பலி!

கட்டுப்பாட்டு மண்டலங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வரையறுக்கும். கட்டுபடுத்தப்படாத பகுதிகளில் எவற்றுக்கெல்லாம் அனுமதியளிப்பது என்பதையும் அவர்கள் முடிவு செய்வார்கள் என பெயர் குறிப்பிடாத மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் வணிக வளாகங்களில் உள்ள சில கடைகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்றும், தனி மனித இடைவெளி பின்பற்றப்பட்டு உணவகங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசுகளும் சிறப்பான வழிகளை அமைக்கும். புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் மறு வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மாநில அரசுகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரி கூறியுள்ளார். இந்த பணம் மாநில பேரிடர் நிவாரணத் தொகையிலிருந்து மத்திய உள்துறை விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: தமிழ்நாட்டுக்கு வந்த புதிய சோதனை!

மத்திய அரசு குறிப்பிட்ட இடங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க விருப்பம் தெரிவிக்கிறது. ஆனால் சில மாநிலங்கள் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறப்பு ரயில்கள் முன்னதாக அனுமதி பெறப்பட்ட பாதைகளில் மட்டும் இயக்கப்படும். அதே சமயம் அத்தியாவசியப் பணிகள், சரக்குகள் எடுத்துச் செல்வதற்கு ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் மாநிலங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பச்சை மண்டலங்களில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அதே சமயம் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும், முகக் கவசங்கள் பயன்படுத்தவும், அடிக்கடி கை கழுவவும் ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்த செய்தி