ஆப்நகரம்

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?-ஊழல் தடுப்புப் பிரிவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டில், அவர் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

TIMESOFINDIA.COM 24 Aug 2018, 1:51 pm
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டில், அவர் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?-ஊழல் தடுப்புப் பிரிவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?-ஊழல் தடுப்புப் பிரிவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி!


திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஜூன் 13 ஆம் தேதி, ஊழல் தடுப்புப் பிரிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், “நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் பராமரிப்புத் திட்டங்களுக்காக உலக வங்கியில் இருந்து ரூ.3500 கோடியைப் பெற்றுள்ளார். இந்தத் திட்டங்களை செயல்படுத்தும் உரிமைகளை முதல்வர் சட்டத்திற்குப் புறம்பாக தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் வழங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரை அளித்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இந்தப் புகாரின் அடிப்படையில் முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஆஜரான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஜூன் 22 ஆம் தேதிதான் புகார் பெறப்பட்டதாகவும், அதையடுத்து உடனே முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதி, புகார் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் முதல் கட்ட விசாரணை முடிக்கப்படாதது ஏன் எனவும், இந்நேரத்திற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறி, செப்டம்பர் 4 ஆம் தேதி, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி