ஆப்நகரம்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்கிறது மத்திய நிபுணர் குழு !

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தினமும் தீவிரமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு சென்னை வந்துள்ளனர்.

TNN 13 Oct 2017, 11:57 am
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தினமும் தீவிரமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு சென்னை வந்துள்ளனர்.
Samayam Tamil council consists of 5 has started its inspection on the effects of dengue in chennai hospitals
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்கிறது மத்திய நிபுணர் குழு !


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், தமிழக அரசு அவசர கால நடவடிக்கையாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையத்தைச் சேர்ந்த கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலில் இந்தக் குழு எந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்கள்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன், சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைப் பார்க்க புறப்பட்டனர். இன்று மாலை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்தியக் குழுவைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிபுணர் குழுவிடம் தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை இந்தக் குழு மத்திய அரசிற்கு இறுதியாக சமர்ப்பிக்கப்படும்.

Council consists of 5 has started its inspection on the effects of Dengue in Chennai hospitals.

அடுத்த செய்தி