ஆப்நகரம்

அரசு ஊழியர்கள் பணி மாறுதல்: தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்!

பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான் எனவும், பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது

Samayam Tamil 28 May 2022, 6:35 pm
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கேசவ ராஜபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஜமுனாராணி என்பவர், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாகும் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு இடமாற்றம் பெறும் வகையில் மே 31ஆம் தேதிக்கு முன் சிறப்பு கலந்தாய்வுக்கு தன்னை அழைக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Samayam Tamil அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்


இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏதும் காலி இல்லை என்பதால் மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியிட மாற்றம் மற்றும் பணிநியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெளிவுபடுத்தினார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? பள்ளிக் கல்வித்துறை தகவல்!
மேலும், நிர்வாக வசதிக்காக கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இந்த சலுகைகளை உரிமை கோர முடியாது என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி