ஆப்நகரம்

சென்னை ரிச்சி சாலையில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!!

சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Oct 2019, 3:29 pm
சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் பெண் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதை அடுத்து அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Samayam Tamil bomb


சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் கேசினோ தியேட்டர் அருகே இன்று இந்த சம்பவம் நடந்தது. ஆட்டோவில் வழக்கறிஞர் மல்லிகா மற்றும் அவரது மகன் இருவரும் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 5 பேர் கும்பல் இவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியது. பின்னர், அரிவாளால் தாக்கினர்.

லலிதா ஜுவல்லரி: தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்!

இதில் காயம் அடைந்த மல்லிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொல்லப்பட்ட ரவுடி தோட்டா சேகரின் மனைவிதான் மல்லிகா என்பது தெரிய வந்துள்ளது. மல்லிகா மற்றும் அவரது மகனை கொள்ளும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெரினா அதிர்ச்சி- குழந்தைகளை கத்தியால் அறுத்து, தாய் தற்கொலை முயற்சி;அடுத்த நடந்த விபரீதம்!

அடுத்த செய்தி