ஆப்நகரம்

நாட்டு வெடிகுண்டு வீச்சு: விஜயகாந்த் எச்சரிக்கை

தேமுதிக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

TNN 5 Oct 2016, 8:41 am
சென்னை: தேமுதிக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
Samayam Tamil country made bombs hurled at dmdk personalitys home vijayakanth warns
நாட்டு வெடிகுண்டு வீச்சு: விஜயகாந்த் எச்சரிக்கை


காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் தேமுதிக பிரமுகர் சசிக்குமார் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதே போன்றதொரு நிகழ்வு ஏற்கனவே ஒரு முறை நடந்துள்ளது. அதனால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்த நிலையில், மீண்டும் ஒரு முறை நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளனர். இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சசிகுமார் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை உடனடியாக கைது செய்து அப்பகுதி மக்களுக்கும், சசிகுமார் குடும்பத்துக்கும் நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை தைரியமாக எதிர்கொண்டு போட்டியிட வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் யார் ஈடுபட்டாலும் தேமுதிக-வினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் தேமுதிக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Country made bombs hurled at DMDK personality's home: Vijayakanth warns #DMDK #Vijayakanth

அடுத்த செய்தி