ஆப்நகரம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி!

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 11 Jul 2016, 6:59 pm
கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil couple attempt self immolation at coimbatore collectorate
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி!


கருமாத்தம்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (47). இவரது மனைவி செல்வநாயகி (43). இவர்கள் இருவரும் உள்ளூரில் ஹார்ட்வேர் கடை ஒன்றை நடத்திவந்துள்ளனர். ஆனால், கடன்சுமை காரணமாக, தொழிலை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பேரில் கடன்கொடுத்தவர்கள் உள்ளூர் போலீசின் உதவியுடன், கதிரேசனை தொழில் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அவரது கடையையும் பூட்டியுள்ளனர்.

இதன்பேரில், நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவரை மீண்டும் தொழில்செய்ய அனுமதிக்கும்படி, காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. ஆனால், எந்த பதில் நடவடிக்கையும் காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்படாததால், விரக்தி அடைந்த கதிரேசன் மற்றும் மனைவி செல்வநாயகி இன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.

திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் வந்து, அவர்களை காப்பாற்றினர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி