ஆப்நகரம்

கைது செய்ய வந்த அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்து தப்பிய தம்பதியர்!!

தூத்துக்குடியில் மைனர் பெண் திருமணத்தை தடுக்க விரைந்து வந்த போலீசாருக்கு கல்தா கொடுத்து தம்பதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 29 Jun 2017, 12:22 pm
தூத்துக்குடியில் மைனர் பெண் திருமணத்தை தடுக்க விரைந்து வந்த போலீசாருக்கு கல்தா கொடுத்து தம்பதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil couple escapes after marriage in thoothukudi
கைது செய்ய வந்த அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்து தப்பிய தம்பதியர்!!


தூத்துக்குடியில் வசித்து வரும் ராமசந்திரனுக்கும் அவரது மாமன் மகள் மீனாட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மணமகள் மீனாட்சிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. இதை அறிந்த ஊர் மக்கள் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் திருமண மண்டபத்திற்கு வந்தபோது மணமக்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து அந்த தம்பதிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில்தான், மைனர் பெண்களை திருமணம் செய்து, கழற்றிவிட்டுச் செல்வதாக ஒரு ஆய்வில் தெரிய வந்து இருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடியில் நடந்த மைனர் பெண் திருமணம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

couple escapes after marriage in thoothukudi

அடுத்த செய்தி