ஆப்நகரம்

சென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்? ஈசிஆர் சாலை அட்டூழியம்

திருமணம் ஆனவர்கள் தங்களது துணைகளை மாற்றிக்கொள்ளும் கலாசாரம் சென்னையில் உருவெடுத்துள்ளதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 3 Mar 2020, 2:49 pm
வாங்கிய பொருட்கள் மீது ஆர்வம் குறைந்தால் அவற்றை வேறொருவருக்கு விற்பனை செய்வது போல கணவன், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாசாரம் சென்னையில் வந்துவிட்டதாக என்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil சென்னையில் கணவன் மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்


என்ன ஆதாரம்?


கடந்த சில தினங்களுக்கு முன்பு சுய விவரத்தை பகிர விரும்பாத சென்னை வாசி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். அதில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் திருமணமான தம்பதிகளை அவர்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் அமைத்துக்கொடுக்கும் ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்த தொழிலதிபர் 'மீவீ ' என்ற செயலியை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எப்படி நடக்கிறது?

சென்னை ஈசிஆரின் புகழ் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சென்னையின் தூங்கா நகரமாக விளங்கும் இங்கு ஆடம்பர ரெசார்ட் முதல் பல்வேறு நட்சத்திர விடுதிகள் உள்ளன. பணம் படைத்தவர்களும், தொழிலதிபர்களும் இங்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மீவீ கலாசாரத்தை பற்றி விவரிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஏற்கனவே துணைகளை மாற்றி சென்றவர்கள் எடுத்திருக்கும் ரகசிய வீடியோக்களும், ஆடியோக்களும் காட்டப்படுகிறது.


இதனால் தூண்டப்படும் மாடர்ன் கலாசார தம்பதிகள் இந்த துணை மாற்றும் விளையாட்டுக்குள் இழுக்கப்படுகின்றனர். பின்னர் இரு வெவ்வேறு தம்பதிகளும் சந்தித்துக்கொள்ள அதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு நன்கு அறிமுகம் ஆன பின்னர் அவர்கள் ; உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு என என்ஜாய் கூறி பயணம், தனிமை, சரக்கு, டிஸ்கோ என டேட்டிங் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதனை விவரித்த புகார் அளித்த நபர் சில ஆதாரங்களையும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. டெல்லி, மும்பையை அடுத்து தற்போது சென்னையிலும் இந்த கலாசாரம் உருவெடுத்துவிட்டதா என்ற அதிர்ச்சி அனைவரிடமும் எழுந்துள்ளது. கலாசார சீர்கேட்டை நோக்கி செல்லும் திருமண உறவு, பலரை பாதிக்காத வண்ணம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி