ஆப்நகரம்

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் தம்பதி பலி!

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 May 2018, 3:16 am
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3


கிருஷ்ணகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதி தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்காக பர்கூர் சென்ற மாதையன் (38), அவரது மனைவி ஆனந்தவள்ளி (31) இரு சக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூரு சாலையில் பர்கூர் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதி வழியாக அதிவேகத்தில் சென்ற கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மாதையன் மற்றும் அவரது மனைவி ஆனந்தவள்ளி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், உயிரிழந்த இருவரின் உடலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

KRISHNAGIRI: A couple died when a speeding car knocked down a two-wheeler they were travelling on near Krishnagiri in Tamil Nadu on Tuesday.

அடுத்த செய்தி