ஆப்நகரம்

சிதம்பரத்தை கைது செய்ய செப்., 28 வரை தடை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Aug 2018, 12:13 pm
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil P-Chidambaram


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் ப.சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் திங்ட்கிழமை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தடைவிதித்து ஜூலை 25ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தடையை செப்டம்பர் 28ஆம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி