ஆப்நகரம்

நடவடிக்கை எடுக்காத கலெக்டர் காரை ஜப்தி பண்ணுங்க: நீதிமன்றம் தீர்ப்பு!

அரசு மருத்துவமனைக்காக நிலத்தை கொடுத்தவருக்கு மாற்று நிலம் கொடுக்க நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட ஆட்சியரின் கார், கணினி, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை ஜப்தி செய்ய மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2019, 3:10 pm
கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த அரிசிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு விவசாய நிலம் இருந்தது. இந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை கட்டுவதற்காக அரசு எடுத்துக்கொண்டது. இதன் காரணமாக தனக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பல முறை மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் பதிலளிக்காத நிலையில் இது தொடர்பாக கோவை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்தார்.
Samayam Tamil நடவடிக்கை எடுக்காத கலெக்டர் காரை ஜப்தி பண்ணுங்க நீதிமன்றம் தீர்ப்பு!


இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தும் கார், 10 கணினிகள், 10 பிரிண்டர்கள், 10 டேபிள் மற்றும் நாற்காலிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தும் நாற்காலி உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ஆனால் தற்போது வரை ஜப்தி நடவடிக்கை எடுக்கபட வில்லை. நாளை வரை கால அவகாசம் கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னரேனும் சண்முகத்துக்கு மாற்று இடம் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி