ஆப்நகரம்

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்குகளில் வெடிக்கும் பூகம்பம்! தமிழக அரசிடம் பதில் கேட்கும் ஐகோர்ட்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2021, 10:19 pm
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநர் ஒப்புதலால் சட்டமானது. அத்துடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள மற்ற சாதியினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும், சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் சட்ட மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai hc


அந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென் நாடு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதனை தொடர்ந்து கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் அமைப்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், '' டாக்டர் பிரபு தாக்கல் செய்திருந்த மனுவில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வித தகவலையும் வழங்காத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்குவதும் விதிகளுக்கு முரணானது.

மீனவ கிராமங்களில் கோச்சிங் வகுப்புகளை எடுக்கும் வளன்சந்திரா தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு மற்றும் நீதித்துறையில் போதிய இடங்களை வன்னியர்கள் பெற்றுள்ளதாகவும், சமூகத்தில் அவர்களின் நிலை, கல்வித்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், வன்னியர்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக'' அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; பள்ளிக்கல்வித்துறை உறுதியான தகவல்!

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரித்த நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரப்பட்டுள்ள இதர வழக்குகளை பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

அடுத்த செய்தி