ஆப்நகரம்

அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை : திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அட்டாக் பாண்டியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 21 Jul 2016, 1:37 pm
மதுரை : திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அட்டாக் பாண்டியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil court reject attack pandis bail
அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி


திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் மர்மகும்பலால் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டியை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பரில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அட்டக் பாண்டி மனுதாக்கல் செய்திருந்தார். கொலைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை,பல நாட்களாக சிறையில் இருப்பதால் என்னுடைய உடல்நிலை மோசமடைந்து வருகிறது எனவே தனக்கு ஜாமின் வழங்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு குறித்து விசாரித்த நிதிபதி வி.எம்.வேலுமணி,அட்டாக் பாண்டியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட அட்டாக் பாண்டி இருவரும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி