ஆப்நகரம்

குற்றால சீசன் களைக்கட்டியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றால சீசன் களைக்கட்டியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

TNN 25 Jun 2017, 10:56 pm
தென்காசி: குற்றால சீசன் களைக்கட்டியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil courtrallam season starts
குற்றால சீசன் களைக்கட்டியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகைத்துள்ளதாலும், விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையுடன் காணப்பட்டனர். அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலம் திருவிழாக் கோலமானது.

சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி