ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனா நிலவரம் எப்படியிருக்கு? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எந்தளவில் இருக்கிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்த கருத்துகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 6 Nov 2020, 11:12 am
நீலகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. கொரோனா பரிசோதனைக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் வலம் வருகின்றன.
Samayam Tamil Palaniswami.


இதன்மூலம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வழி செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அங்கு பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. மாநில அரசின் தொடர் முயற்சியால் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

பட்டாசு மீதான தடையை நீக்கவேண்டும்: இரு மாநிலங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இன்று காலை நிலவரப்படி 7,36,777 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதில் 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 11,272 பேர் பலியாகியுள்ளனர். 19,061 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,413 பேர் குணமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி